சென்னை, அக். 30 - பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டத்தை அறிவித்துள்ளது. மேலும், முதலமைச்சர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவும் கோரியுள்ளது.
இது தொடர்பாக முதல மைச்சருக்கு ஜாக்டோ ஜியோ அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி யிருப்பதாவது:
இந்தியாவில் நான்கு மாநிலங்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு திரும்பு வதாக அறிவித்துள்ளன. இதற்கு பிறகும், தேர்தல் அறிக்கையில் சொன்னபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாமல் இருப்பது பெருத்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
1.4.2003க்குப் பிறகு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கால வரையின்றி முடக்கி வைக்கப்பட் டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடி யாக வழங்கிட வேண்டும்.
ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். பேராசிரியர்களுக்கு நிலுவையிலுள்ள பணி மேம்பாடு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரி யர்களாக உயர்த்த வேண்டும்.
சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோருக்கு வரையறுக்கப் பட்ட ஊதியம் வழங்க வேண்டும். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அரசுத் துறைகளில் 30 விழுக் காட்டிற்கு மேல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
21 மாத ஊதிய நிலுவையை வழங்க வேண்டும், தொகுப் பூதியத்தில் நியமனம் செய்யப் பட்டவர்களை பணிவரன் முறைப்படுத்தி ஊதியம் வழங்க, சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தினை முறைப்படுத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறைகளில் தனியார் முகமை மூலம் பணியாளர்களை நியமனம் செய்வதை தடை செய்ய வேண்டும் ஆகிய 10 அம்ச கோரிக் கைகள் முதலமைச்சர் பொறுப் பேற்று கடந்த இரண்டரை ஆண்டுகளாக நிறைவேற்றப்படா மல் உள்ளது.
வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி நவ.1 அன்று மாவட்டத் தலைநகரங்களில் மாலை நேர கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், நவ. 15 - 24 வரை ஆசிரியர், அரசு ஊழியர், அரசுப் பணியாளர் சந்திப்பு பிரச்சார இயக்கம், நவ.25 மாவட்டத் தலை நகரங்களில் மறியல், டிச.28 கோட்டை முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளோம்.
எனவே, முதலமைச்சர், ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளை உடனடியாக அழைத்து பேசி அறிவிப்புகளை வெளியிட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.